( பிறந்த மண் விட்டு பிழைப்புத்தேடி டாலர்சிட்டி நோக்கிப் புறப்படும் முன் கேட்க வேண்டிய உஷார் கீதம் )
பொம்மியக்கா திம்மியக்கா சேதி கேளுங்கடி - பீத்தைப்
பட்டிக்காடு வேணாமடி பட்டணம் வாங்கடி
திருப்பூரில் சூபபுத்திட்டம் நிறைய்ய இருக்குடி - எங்க
திமிங்கலங்கள் ஒண்ணாக்கூடிப் போட்ட திடடமடி
அஞ்சுவருசம் பத்துவருஷம் எழுதி வாங்குவோம் - சுமங்கலியா
அக்காதங்கை எல்லாரையும் வேலைக்குச் சேர்த்துவோம்
ஆயிரத்தை எழுதிக்கிட்டு ஐநூறு தருவோம் - எவளும்
ஆன்னாஊன்னா அப்புறம்வெறும் முன்னூறு தருவோம்
வேலைக்கார நாய்கள்தட்டி கேக்கப்ப் படாது - அப்புறம்
வில்லங்கமேதும் நாங்கசெஞ்சா புலம்பக் கூடாது
வரகுக்கஞ்சிக்கு இல்லாமத்தானே பட்டணம் வாறீக..? - இங்கே
விடுதிச் சோத்துக்கு வேலைசெஞ்சா கெட்டாபோவீக..?
ஈயத்தட்டை ஏந்திக்கிட்டு வரிசையில் வாங்கணும் - சோத்தில்
ஈயிபல்லி இருந்துச்சுன்னா அசைவம்னு திங்கணும்
களத்துமேட்டில் சேரும்சோறும் ஒன்னாத்தின்னவங்க - இங்கே
நளபாகம் கேக்குறது கொழுப்புத் தானேடி..?
எட்டுகெட்டு அளவிலொரு அரண்மனை தாறோம் - அதிலே
எட்டுமூதி படுத்துக்கலாம் பாயொண்ணு தாறோம்
ஆடுமாட்டை பட்டியடைச்சுப் பழகினநீங்களா - அறையில்
ஆளிடிச்சா நெரிசலுன்னு குடைச்சல் பண்றது..?
கள்ளிமறைப்பில் போனநீங்க கக்கூசில் போலாம் - அதுலே
தண்ணிவரும் நாப்பொழுதில் கழுவீட்டும் வரலாம்
ஆணுபெண்ணுக்குத் தனித்தனியா கக்கூஸ் இருக்குடி - கதவு
ஒடைஞ்சிருந்தா பொம்பளைது கதவில்லாட்டி ஆமபளைது
பெட்டைநீங்க மறைஞ்சுநின்னு குளிக்க வேணுன்னுதான் - தனியா
அட்டைபோட்டு நாலாப்பக்கம் கட்டி வெச்சிருக்கோம்
ஆத்துமேட்டில் அவுத்துப்போட்டு குளிச்ச கேட்டுக்கு - வேலைக்குச்
சேத்துக்கிட்ட பாவத்துக்கு சிலுப்பக் கூடாது
விடுதிக்குள்ளே மாசாமாசம் சினிமாக் காட்டுவோம் -அதுவும்
வேலைமுடிஞ்ச மூணாம்ஜாமத்தில் மட்டும் ஓட்டுவோம்
விடுமுறைநாள் ஒண்ணோரெண்டோ வெளியிலும் போலாம் - போயிட்டு அரைநாளில் திரும்பலேன்னா வேலையும் போலாம்
வேலைபோனாலும் வீட்டுக்குமட்டும் அனுப்பிறமாட்டோம் - செஞ்ச
வேலையிலேயே புதுக்கூலின்னு மறுபடி சேர்ப்போம்
ஒத்தெழுதின எக்ரிமென்ட்டு முடியறவரைக்கும் - நீங்க
செத்தாக்கூட ஆவியப்புடிச்சு வேலை வாங்கிருவோம்..
Monday, July 5, 2010
DOLLER CITY geetham
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா எழுதியிருக்கீங்க தோழர்... ஆனா அந்த தலைப்பு மட்டும் ஏன் ஆங்கிலத்துல?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete