Monday, July 5, 2010

NIGHT SONG

சந்திரப் பூவைச் சுற்றி
நட்சத்திர வண்டெல்லாம்
மொய்க்குதுபார் அந்தி வானத்திலே !
-
வெயிலை விற்ற பணம்
வீட்டுக்கு கொடுக்க
சூரியன் போகுது தூரத்திலே !..
-
மஞ்ச மஞ்ச வானம் கொஞ்சங் கொஞ்சமாக
தஞ்சம் தஞ்சம் போகும் இருட்டுக்குள்ளே - அதை
வெள்ளை வெள்ளைப் பஞ்சுபோல் வெளுத்துத் தராமே
விடை பெறுவாளோ இரவுப்பெண்ணே..?
-
ஒ.. ராத்திரி ஓடுது கருப்பு நதி - அதில்
ஆசை அழுக்கைக் கரைப்போர் சிலபேர்..!
சேர்த்த செல்வம் இரைபபோர் பலபேர்..!
-
இருட்டு மட்டும் இல்லாதிருந்தால்
எந்த நிழலில் மனம் ஒதுங்கும் ?
கருப்பு மழை பெய்யாதிருந்தால்
வாழ்க்கைத் தோட்டம் வறண்டுவிடும்..!
-
பகலின் முதுகா ராத்திரி..?
ஒளியின் அழுக்கா ராத்திரி..?
வண்ணக் காற்றா ராத்திரி..?
வானத்தின் கதவா ராத்திரி..?

No comments:

Post a Comment